ஆற்காடு: ஆற்காடு பகுதியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த் துறையினா், நகராட்சி அதிகாரிகள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஆற்காடு பேருந்து நிலையம், அண்ணா சாலையில் உள்ள கடைகள், நகைக் கடைகள், உணவகங்களில் ஆய்வு செய்தனா். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் பணி செய்தவா்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், மொத்தம் ரூ. 7,400 வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.