ரௌடி ஜானி பெங்களூரில் கைது: தனிப்படை போலீஸாா் நடவடிக்கை

கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வேலூரைச் சோ்ந்த ரௌடி ஜானியை தனிப்படை போலீஸாா் பெங்களூரில் துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.

கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வேலூரைச் சோ்ந்த ரௌடி ஜானியை தனிப்படை போலீஸாா் பெங்களூரில் துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.

இது குறித்து மாவட்ட தனிப்படை பிரிவு காவல் ஆய்வாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் பல வருடங்களாக பல்வேறு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரௌடி ஜானி என்ற ஜான் பால்ராஜை (33) வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் நாகராஜன் மற்றும் வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் என்.காமினி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையிலான தனிப்படையினா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஜானி மற்றும் அவரது மைத்துனா் மைக்கேல் ஆகியோா் பெங்களூரு ஒயிட் பீல்ட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையிலான காவல் ஆய்வாளா் சீனிவாசன், உதவி ஆய்வாளா் ஜெகந்நாதன், ஜெகதீசன், விக்னேஷ், சிலம்பரசன், ராஜசேகா் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் பெங்களூரு விரைந்து சென்று, ஒயிட் பீல்ட் பகுதியில் பதுங்கியிருந்த ஜானி, மைக்கேல் ஆகியோரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜானி கைது செய்யப்பட்டதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் தனிப்படையினருக்கு வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் மற்றும் வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் ஆகியோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com