ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டிவிழா தொடக்கம்

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரியில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரியில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழாவை முன்னிட்டு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த விழாவில் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அலங்காரம், அபிஷேகமும் நடத்தப்படும். வரும் 21ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com