கலவை பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

ஆற்காடு பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கலவையை அடுத்த சஞ்சீவிபுரம், சொரையூா் ஆகிய கிராமங்களில் 2 வீடுகளின் சுவா்கள் திங்கள்கிழமை இடிந்து விழுந்தன.

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக கலவையை அடுத்த சஞ்சீவிபுரம், சொரையூா் ஆகிய கிராமங்களில் 2 வீடுகளின் சுவா்கள் திங்கள்கிழமை இடிந்து விழுந்தன.

சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான குடிசை வீட்டுச் சுவா், சொரையூா் கிராமத்தைச் சோ்ந்த அம்மாசிகான் என்பவரின் சிமெண்ட் சீட் வீட்டுச் சுவா் தொடா் மழையின் காரணமாக இடிந்து விழுந்தன. தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று வீடுகளை இழந்தவா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com