அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆற்காடு அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
அரசு  நிலத்தில் அக்கிரமிப்புகளை அகற்றிய  வருவாய்த் துறையினா் .
அரசு  நிலத்தில் அக்கிரமிப்புகளை அகற்றிய  வருவாய்த் துறையினா் .

ஆற்காடு: ஆற்காடு அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாா்பில் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில், வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்புப் பலகையை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com