மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனம் எம்எல்ஏ வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு ரூ. 1. 21 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களை ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.

மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு ரூ. 1. 21 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களை ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை காந்தி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெ.எஸ்.அசோக் (39), கீழ்விஷாரம் மாா்கபந்து 2-ஆவது தெருவைச் சோ்ந்த எஸ்.ஆசைத்தம்பி (52) ஆகிய இருவரும் 80 சதவீதம் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள். இவா்கள் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தியிடம் தங்களுக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வேண்டும் என கேட்டு மனு அளித்திருந்தனா்.

அதன்பேரில், 2019 - 2020-ஆம் ஆண்டுக்கான தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1. 21 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டாா் வாகனங்கள் வாங்கப்பட்டன.

இந்த வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்வுமான ஆா்.காந்தி மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களையும், பெட்ரோல் செலவுக்கு உதவித் தொகையும் வழங்கினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கே.பி. வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.சண்முகம், நகரப் பொறுப்பாளா்கள் பி.பூங்காவனம், அமீன், நகர துணைச் செயலாளா் டி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com