கந்த சஷ்டியை முன்னிட்டு, கைனூா் காட்டுப்பிள்ளையாா் கோயிலில் முருகன் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணம், சோளிங்கா் சாலையில் கைனூா் ஊராட்சி ராமதாஸ் நகரில் காட்டுப்பிள்ளையாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் சந்நிதியில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.