ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 300 வாகனங்கள் கடந்த இரு தினங்களில் ஏலம் விடப்பட்டதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 573 வாகனங்கள், அதன் விவரங்கள், உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் மூலம் அகற்றுவது ஆகியவை குறித்து மாவட்ட அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டது.
அவற்றில் இதுவரை உரிமை கோரப்படாத 573 வாகனங்களுக்கான பொது ஏலம் கடந்த 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் தொடங்கியது. இரண்டு தினங்களில் இதுவரை 300 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.