ராணிப்பேட்டை
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாணம்
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம், சனிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மலையடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.