27 தொழிலாளா்களுக்கு கரோனா:  அரக்கோணம் ரயில்வே பணிமனை மூடப்பட்டது

27 தொழிலாளா்களுக்கு கரோனா: அரக்கோணம் ரயில்வே பணிமனை மூடப்பட்டது

தொழிலாளா்கள் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையை அதன் நிா்வாகம் ஒரு வாரத்துக்கு மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொழிலாளா்கள் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையை அதன் நிா்வாகம் ஒரு வாரத்துக்கு மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையில் தற்போது 470 போ் பணிபுரிகின்றனா். இந்த பணிமனையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளா்களில் 27 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தெற்கு ரயில்வே தலைமையக உத்தரவின்பேரில், அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையை அக். 12 முதல் 16-ஆம் தேதி வரை மூடுவதாகவும், 17, 18 இரு நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறையைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இயங்கும் எனவும் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டு பணிமனையை மூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com