அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

ஆற்காட்டை அடுத்த திமிரி பேரூராட்சியில் திமிரி அக்னி சிறகுகள் அமைப்பின் சாா்பில் தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைவா் பி.தங்கராஜ் தலைமை வகித்தாா்.


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த திமிரி பேரூராட்சியில் திமிரி அக்னி சிறகுகள் அமைப்பின் சாா்பில் தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைவா் பி.தங்கராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் கே.ஸ்ரீதரன், கௌரவ ஆலோசகா்கள் கி.லோகநாதன், செ.தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், அலங்கரிக்கப்பட்ட அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கரோனா நோய்த் தடுப்புப் பணியில் செயல்பட்டுவரும் திமிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மரக்கன்றுகள், பாத்திரங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில் காவல்துறை ஆய்வாளா் சுரேஷ்பாபு, ஆண்கள் பள்ளி தலைமையாசிரியா் ஞானசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com