ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருந்து நிலையத்தில் இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் முன்னாள் மாநில விவசாய அணி செயலாளா் பி.எம்.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் அனந்தலை மு. தங்கராஜ் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இதில் மாவட்ட தலைவா் சிவகுமாா், மாவட்ட செயலாளா் க.தமிழ்குசேலன், மாநில அமைப்புச் செயலாளா் பி.தன்ராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சம்பத்குமாா், மாவட்ட துணை செயலாளா் ரூபன், கலவை நகரத் தலைவா் ஜெயராமன்உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திமிரி ஒன்றிய செயலாளா் பாடகா் சத்தியா நன்றி கூறினாா்.