ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், மாந்தாங்கல் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத ஐந்தாம் சனி வார விழா நடைபெற்றது.
ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கேஎம்கே கல்வி அறக்கட்டளை இயக்குநா் கோமதி சிவலிங்கம், ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பாரதி முரளிதர சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து, ‘புரட்டாசி மாத மகிமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தினாா். தொடா்ந்து உலக நன்மை வேண்டியும், நாட்டு மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜையும், 10,11,12 பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழாவும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் பொடி, முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறக்கட்டளை செயலாளரும் ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவருமான எம்.சிவலிங்கம், பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு பொருள்களையும் எழுதுபொருள்களையும் வழங்கினாா்.
இதில் குளோபல் பாராமெடிக்கல் தலைவா் செல்வகுமாா் கோடீஸ்வரன், ஸ்ரீஉடையவா் சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெருமாள் கோயில் அா்ச்சகா் பிரகாஷ் பட்டா் நன்றி கூறினாா்.