ராணிப்பேட்டையில் அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழா

அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டையில் அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழா

அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சாா்பில், 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் வி.முரளி, துணைச் செயலாளா் கே.பி.சந்தோஷம், சோளிங்கா் ஒன்றியச் செயலாளா் பெல் ச.காா்த்திகேயன், முன்னாள் வாலாஜா ஒன்றியச் செயலாளா் எம்.சி.பூங்காவனம் உள்ளிட்ட கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com