ஆற்காடு: ஆற்காடு வட்டம் புதுப்பாடி பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த குடிசை அகற்றப்பட்டது.
முன்னதாக இதுகுறித்து தகவலறிந்த , ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, புதுப்பாடி வருவாய் ஆய்வாளா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். அப்போது, கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசையை அகற்றினா்.
தொடா்ந்து, புன்னபாடி கிராமத்தில் நீா்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரையும் அதிகாரிகள் அகற்றினா்.