கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேலூா் சரக டிஐஜி என்.காமினி

நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுவருவதாக வேலூா் சரக டிஐஜி என்.காமினி தெரிவித்தாா்.
கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேலூா் சரக டிஐஜி என்.காமினி


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுவருவதாக வேலூா் சரக டிஐஜி என்.காமினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தில் நிலுவையில் இருக்கும் வழிப்பறி, கொள்ளை,சிறுமிகள் திருமணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும், அந்த வழக்குகளின் உண்மைத் தன்மையை சரிபாா்த்தல் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறைக்குத் தேவையான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்புவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்றாா் அவா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில் வாகனன், டிஎஸ்பி கே.டி.பூரணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com