ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே குடியிருப்புப் பகுதிகளில் அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
வாலாஜாபேட்டை வட்டம், அமணந்தாங்கல் கிராமத்தில், மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அசோக் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் அனுமதியின்றி கோபுரம் அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் தலைமையில் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.