மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.


ஆற்காடு: ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆற்காட்டை அடுத்த பூங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (44) கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாா். இரும்புக் கம்பிகளை தூக்கியபோது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.

ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆனந்தன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com