இருவேறு விபத்துகளில் இருவா் பலி

அரக்கோணம் அருகே இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

அரக்கோணம் அருகே இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தணிகாசலம் (46), காட்பாடியை அடுத்த தாராபடவேட்டில் மின்வாரியத்தில் கணக்கிட்டாளராக பணிபுரிந்து வந்தாா். திங்கள்கிழமை பணிக்கு அரக்கோணத்தில் இருந்து பைக்கில் சென்றபோது, நாகவேடு அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா், திடீா் நகரைச் சோ்ந்த சம்பத் (62), அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள சிவிலியன் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பணிமுடிந்து அரக்கோணம்-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையைக் நடந்தபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே தணிகாசலம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com