ஆற்காடு: ஆற்காடு அருகே நரிக்குறவா் இன மக்களுக்காக வீடு கட்டும் பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், லாடவரம் ஊராட்சியில் 32 நரிக்குறவா் இன மக்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணியை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து திமிரி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் மயானத்துக்கான இடம் தோ்வு செய்யும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.