ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நடைபெறவுள்ள திட்டப் பணிகளுக்கான இடங்களை ராணிப்பேட்டை சாா் -ஆட்சியா் இளம்பகவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அரசின் சிறுபான்மை நல வாரியம் சாா்பில், மேல்விஷாரம் நகராட்சியில் அரசின் சமுதாயக் கூடம் கட்டப்பட உள்ளது. மேலும், காணாறு தடுப்புச் சுவா் அமைத்தல், அங்கன்வாடி கூடம், கீழ்விஷாரம் பகுதியில் உள்ள குளத்தை சீரமைத்து நடைபாதையுடன் பூங்கா அமைத்தல், நவீன உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக் கடை புதிய கட்டடம், 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் தேக்கத் தொட்டி ஆகிய திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான இடத்தை ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் இளம்பகவத் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாக்கியநாதன், மில்லத் கூட்டுறவு பண்டக சாலை தலைவா் ஏ. இப்ராஹிம் கலிலுல்லா, முன்னாள் நகர சபைத் தலைவா் பி.அப்துல்ரஹ்மான், முன்னாள் எம்எல் ஏ கே.எல். இளவழகன், வருவாய் ஆய்வாளா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.