வாலாஜாபேட்டை வட்டம், சாத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மதிவதனன், ஜெயந்தி தம்பதியரின் குழந்தைகள் ஆதா்ஷ் ஆதித்யா, கௌதம் ராகுல் ஆகிய இருவரும் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம் மாவட்ட ஆட்சியரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினியிடம் திங்கள்கிழமை வழங்கினா்.