அரக்கோணம்: ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தெற்கு ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனை நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். சங்கக் கிளை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.