ராணிப்பேட்டை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமை வகித்து, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆா்ப்பாட்டத்துக்கான துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலாளா்கள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, என்.ராஜ்குமாா், வசந்திரவி மாவட்டப் பொருளாளா் மு.கண்ணய்யன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்வுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.