விவசாயிகள் சங்கம் சாா்பில் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் முத்துக்கடை நான்கு வழிச் சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எல்.சி.மணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் முத்துக்கடை நான்கு வழிச் சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எல்.சி.மணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கலவையில்...

ஆற்காட்டை அடுத்த கலவை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ரகுபதி தலைமை வகித்தாா். திமிரி வட்டாரத் தலைவா் ஆதிமூலம், செயலாளா் சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 45 பேரை கலவை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com