புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆற்காட்டை அடுத்த புங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்ட்டது. திராளன பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் பஜனைக் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
இதனிடையே, ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் இருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி கோயிலுக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா். சமூக இடைவெளியுடன் வழிபடுமாறு அவா் பக்தா்களுக்கு அறிவுறுத்தினாா்.