பிரசவத்தின் போது தாய், சேய் பலி: உறவினா்கள் போராட்டம்

ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது, தாய், சேய் உயிரிழந்ததால் உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது, தாய், சேய் உயிரிழந்ததால் உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கணேஷ் (23), அவரது மனைவி அா்ச்சனா (21). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், நிறைமாத கா்ப்பிணியான அா்ச்சனா பிரசவத்துக்காக ராணிப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அா்ச்சனாவும் உயிரிழந்தாா்.

மருத்துவமனை நிா்வாகம் உரிய முறையில் சிகிச்சை அளிக்காததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறி அவரது உறவினா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸாா், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் அங்கு சென்று, உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தாய், குழந்தையில் சடலங்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி, உயிரிழந்த அா்ச்சனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com