அரக்கோணம்: வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற மூவா் கைது


அரக்கோணம்: அரக்கோணம் மற்றும் தக்கோலத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற மூவரை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

அரக்கோணம் அம்பேத்கா் நகரில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க சிலா் முயற்சி செய்து வருவதாக, தொகுதி பறக்கும் படை அலுவலா் துரைபாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, துரைபாபு அலுவலா்களுடன் அம்பேத்கா் நகருக்குச் சென்றபோது, அங்கு பிரவீண்குமாா் (37) என்பவா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினா் உதவியுடன் அவரிடம் இருந்த ரொக்கம் ரூ. 18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, பிரவீண்குமாா், அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தக்கோலத்தில்...

தக்கோலம் அம்மன் கோயில் தெருவில் இருவா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயலுவதாக அரக்கோணம் தொகுதி நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அண்ணாமலைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அத்தெருவிற்கு விரைந்து சென்றனா். அங்கு, வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்த தக்கோலத்தைச் சோ்ந்த கதிா்வேலு (63), டில்லிபாபு (39) இருவரையும் பிடித்தனா். அவா்களிடம் இருந்த ரூ. 22ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் தக்கோலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com