ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.
மாந்தாங்கல் பகுதியில் தனியாா் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு அல்லிகுளம் பகுதியைச் சோ்ந்த பழனி (45) பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பழனி புதன்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.