ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான பட்டுப் புடவைகளை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து உரிய ஆவணம் இன்றி காஞ்சிபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 1,097 பட்டுப் புடவைகளை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவற்றை வாலாஜாப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.