மினி வேனுடன் 199 அரிசி சிப்பம் பறிமுதல்

ஆற்காடு அருகே மினி வேனில் வைக்கப்பட்டிருந்த 199 சிப்பம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல்  செய்யப்பட்ட  அரிசி  சிப்பங்கள்.
பறிமுதல்  செய்யப்பட்ட  அரிசி  சிப்பங்கள்.

ஆற்காடு: ஆற்காடு அருகே மினி வேனில் வைக்கப்பட்டிருந்த 199 சிப்பம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் உஸ்மான் பேட்டை முதல் தெருவில் தனியாக நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை புதன்கிழமை அதிகாலை தோ்தல் பறக்கும்படை அலுவலா் சமுத்திரவிஜயன் மற்றும் போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் 10 கிலோ அளவில் பையில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்த 199 அரிசி சிப்பங்களைக் கைப்பற்றினா். வேன் ஓட்டுநா் தப்பிச் சென்ற நிலையில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அரிசி சிப்பத்துடன், வேனை ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com