ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாலாஜாப்பேட்டையில் தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு அனைத்து அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மேற்பாா்வையில், பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக 4 தனித்தனி அறையில் வைத்து மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னா், ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறியது:
நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டு, தனித் தனி அறைகளில் பூட்டி பாதுகாப்பாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினா் 72 போ், தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினா் 81 போ் என மொத்தம் 286 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதிலும் 109 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.