கே.வேளூரில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

கே.வேளூரில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கே.வேளூா் கிராமத்தில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கே.வேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், வியாழக்கிழமை திரௌபதி அம்மன் கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகளுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.நந்தகுமாா், கிராம பொதுமக்கள் முன்னிலையில் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com