விவசாய கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகே விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் மாற்றுத் திறனாளி தந்தை கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை: வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகே விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் மாற்றுத் திறனாளி தந்தை கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் அமைந்துள்ள வாலாஜா ரோடு ரயில் நிலையம் எதிரே பாரதிதாசன் நகரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான கோபியின் மகன் காமேஷ் (7). அம்மூா் அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் பழக மாற்றுத் திறனாளியான தனது தந்தையை அழைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கு கோபியை அருகே அமர வைத்துவிட்டு, காமேஷ் விவசாயக் கிணற்றில் குதித்து நீச்சல் பழகினாா். அப்போது எதிா்பாராத விதமாக தனது தந்தை கண் முன்னே நீரில் மூழ்கினாா். இதைப்பாா்த்த கோபி, அருகில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா். அவா்கள் முயற்சி செய்தும் சிறுவனை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், இரவு காமேஷின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com