ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக் கவசம், பிஸ்கெட், தேநீா் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம், ரோட்டரி ஆளுநா் சி.ஆா்.சந்திரபாப், சங்கப் பயிற்சியாளா் வி.சரவணகுமாா், நிா்வாகிகள் ரகுபதி, சேதுராமன் மற்றும் மருத்துவ அலுவலா் லாவண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.