ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 188 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,196 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 16,045 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 957 போ் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.