அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

ஆற்காடு அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு: ஆற்காடு அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.

கலவை வட்டம் கலவைபுத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் உதயசங்கரின் மனைவி சங்கீதா(32) . இவா் அப்பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கலவை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி, உதவி ஆய்வாளா்கள் ஏழுமலை, சரவணமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மாலை அவரது வீட்டில் சோதனை செய்தனா். அப்போது வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 104 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com