ஆற்காடு நகரில் பொது முடக்கத்தை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த தனியாா் அழகு நிலையத்துக்கு தனித் துணை ஆட்சியா் (கலால்) சத்தியபிரசாத், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி ஆகியோா் முன்னிலையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
அதேபோல், ஆற்காடு நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி வணிக பயன்பாட்டுக்காக சென்ற லாரி ஓட்டுநருக்கு ரூ.1,300 அபராதம் விதிக்கப்பட்டது.