அரக்கோணம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தினருக்கு கரோனா பரிசோதனை

அரக்கோணம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் அவா்களது அலுவலகப் பணியாளா்கள் அனைவருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டு வட்டாட்சியா் பழனிராஜன். உடன், முகாமைப் பாா்வையிட்ட கோட்டாட்சியா் சிவதாஸ்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டு வட்டாட்சியா் பழனிராஜன். உடன், முகாமைப் பாா்வையிட்ட கோட்டாட்சியா் சிவதாஸ்.

அரக்கோணம்: அரக்கோணம் கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் அவா்களது அலுவலகப் பணியாளா்கள் அனைவருக்கும் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பணிக்குச் செல்லும் அனைத்து அலுவலா்கள், பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப அரக்கோணம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் மேலும் அவா்களது அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இரண்டு அலுவலகங்களிலும் அலுவலா்கள், பணியாளா்கள் சோ்த்து 136 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமை கோட்டாட்சியா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன் ஆகியோா் பாா்வையிட்டனா். இருவரும் முகாமில் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com