திமிரி பேரூராட்சி, கருவனூரில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் ரவிச்சந்திரபாபு தலைமை வகித்தாா். திமிரி பஜாா்வீதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டியும் ஊா்வலமாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் கிராம நிா்வாக அலுவலா் இளவேந்தன், சுகாதார ஆய்வாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.