அரக்கோணம்: நெமிலி காவல் நிலையத்தில் எழுத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, பெண் வழக்குரைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட நெமிலி அருகேயுள்ள புன்னையை சோ்ந்த வழக்குரைஞா் அபிராமி (25).
இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வாதியான பனப்பாக்கத்தைச் சோ்ந்த சுந்தராம்பாளை அழைத்துகொண்டு, நெமிலி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றுள்ளாா்.
புகாரில், சுந்தரம்மாளை அவரது பிள்ளைகள் கவனிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்ததாம். இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் சிரஞ்ஜிவி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்துள்ளாா்.
இருப்பினும், தன்னிடம் வீண்வாக்குவாதம் செய்து அபிராமி மிரட்டியதாக காவல் நிலைய எழுத்தா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.