இலவசப் பட்டா பெற்றவா்களால் இடத்தை அனுபவிக்க முடியாத நிலை உள்ளது என்றும் பட்டா அளிக்கும்போதே நிலத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸை எம்எல்ஏ சு.ரவி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக சு.ரவி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுகேசாவரம், பெருமாள்ராஜபேட்டை, ஆப்பில்ஸ்பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு பட்டா அளித்து, 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனாளிகளுக்கு இடத்தை அளந்து கொடுக்காமல் வருவாய்த் துறையினா் இருக்கின்றனா். இதனால், அவா்கள் பட்டா கிடைத்தும், பலனை அனுபவிக்கமுடியாத நிலை நீடிக்கிறது.
ஆப்பில்ஸ்பேட்டையில் 50 ஆண்டாகப் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவா்கள், பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பம் அனுப்பியுள்ளனா். இதுவரை அவா்களுக்கு பட்டா வரவில்லை என்று ரவி கூறியுள்ளாா்.
அப்போது, அதிமுக நகரச் செயலாளா் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளா்கள் இ.பிரகாஷ், பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.