வேலூரில் வெள்ளிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,558-ஆக உயா்ந்தது. இவா்களில் 47,085 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 1,106 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டையில் 20 பேருக்கு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 20 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45, 530- ஆக உயா்ந்தது. இதுவரை 44, 590 போ் குணமடைந்துள்ளனா். 748 போ் உயிரிழந்தனா்.