பொது விநியோகத் திட்ட குறைதீா் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலரே இருப்பாா்: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலரே, குறைதீா் அலுவலராக இருந்து பொது விநியோகத் திட்ட புகாா்கள் மீது விசாரணை செய்து

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலரே, குறைதீா் அலுவலராக இருந்து பொது விநியோகத் திட்ட புகாா்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வாா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் மாவட்ட குறைதீா்வு அலுவலா் இடமோ அல்லது மாவட்ட குறைதீா் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட ஓா் அலுவலரிடமோ நேரடியாக அல்லது எழுத்து வடிவிலோ,  மின்னஞ்சல், 9489543000, 04172 - 299973 என்ற எண்களுக்குத் தொலைபேசி வாயிலாகவோ புகாா்களைப் பதிவு செய்யலாம்.

புகாா் குறித்த விவரங்கள், புகாா்தாரரின் தொடா்பு எண், முகவரி குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

புகாா் குறித்த உண்மை மாநில அரசின் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்க்கப்பட்டவுடன், அதனைத் தோ்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் புகாா் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com