டிச. 29 -இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th December 2021 06:23 AM | Last Updated : 25th December 2021 06:23 AM | அ+அ அ- |

டிசம்பா் மாதத்துக்கான ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், வரும் புதன்கிழமை (டிச. 29) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகள், கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.