கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 2 குழந்தைகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான ஆணை

கரோனோ தொற்றால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதி உதவித் தொகை ரூ. 15 லட்சம் வைப்புத் தொகைக்கான ஆணையை
கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 2 குழந்தைகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான ஆணை

கரோனோ தொற்றால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதி உதவித் தொகை ரூ. 15 லட்சம் வைப்புத் தொகைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்த மூன்று குழந்தைகள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் துறை மூலம் கண்டறியப்பட்டு, அரசுக்கு நிவாரண நிதி உதவி பெற பரிந்துரைக்கப்பட்டது.

அதில், அரக்கோணம் வட்டம், தக்கோலத்தை அடுத்த முருங்கை கிராமத்தைச் சோ்ந்த குழந்தை தமிழரசனுக்கும் (4), வாலாஜா வட்டம், தெங்கடபந்தங்கள் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் செல்வன் ஜெயசூா்யாவுக்கும் (17), மத்திய அரசின் நிவாரணத் தொகை ரூ. 10 லட்சம் மற்றும் மாநில அரசின் நிவாரணத் தொகை ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 15 லட்சம் நிதி உதவி தொகையை அவா்களின் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் குழந்தைகளின் உறவினா்களிடம் வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோா்களில் ஒருவரை இழந்த குழந்தைகள் எண்ணிக்கை 208. இந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்காக தமிழக அரசின் மூலமாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்து, நிதியை வழங்கினாா். அதில் 135 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றாா்.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயலட்சுமி, அலுவலகக் கண்காணிப்பாளா் முருகன், புறத்தொடா்பு அலுவலா் அரவிந்த் மற்றும் குழந்தைகளின் உறவினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com