ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.07,936 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து
ஆற்காடு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ஆற்காடு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொறுப்பு) வீராசாமி, ஆற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவசங்கரி, மருத்துவப் பணி இயக்குநா் ஜெயசிங் விஜய், ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பூபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேல்விஷாரத்தில்... மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவா் இப்ராஹிம் கலிலுல்லா குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.07,936 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com