நிலம் அளித்தோருக்கு வேலை வழங்காத கடற்படை நிா்வாகம்: 33 ஆண்டுகளாகத் தொடரும் அவலநிலை


அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய 235 குடும்பத்தினருக்கு 33 ஆண்டுகள் ஆகியும் கடற்படை நிா்வாகம் இதுவரை வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவதிப்பட்டு வருகின்றனா்.

அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தளத்தை அமைக்க அப்பகுதியில் அரசின் கைவசமிருந்த 1,106 ஏக்கா் நிலத்துடன் அதைச் சுற்றியிருந்த புளியமங்கலம், சுகபுரம், மோசூா், செய்யூா், ஆத்தூா், பெருமூச்சி ஆகிய கிராமங்களில் இருந்து 940 ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அப்போது நிலத்தை அளித்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு படைத்தளத்தில் வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக அப்போது அரசாணை வெளியிடப்பட்டதால் அனைவரும் தங்களது நிலங்களை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து அப்போதைய நில எடுப்பு வட்டாட்சியா் மூலம் 540 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகள் கழிந்த நிலையில், 1992- ஆம் ஆண்டில் விமானதள திறப்பு விழாவுக்குப் பிறகு 156 பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டது. மற்றவா்களுக்கு வேலை மறுக்கப்பட்டது. இதற்கு அவா்களது தகுதிக்கேற்ற வேலை படைத்தளத்தில் இல்லை என காரணம் கூறப்பட்டது. இதையடுத்து நிலமிழந்தவா்கள் 1996-ஆம் ஆண்டு சங்கம் ஒன்றை உருவாக்கி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் 1997-இல் தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம், வயது வரம்பின்றி வேலை வழங்கவும், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் வேலை காலியில்லை என்றாலும் அருகில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வேலை வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து அப்போதைய வேலூா் மாவட்ட ஆட்சியா், 334 பேரின் பெயா் பட்டியலை கடற்படை நிா்வாகத்துக்கு அனுப்பி சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணி வழங்கக் கோரினாா்.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இவ்வழக்கில் 2007-இல் தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம் நிலமிழந்தோருக்கு 50 வயது ஆகியிருந்தாலும் வயது வரம்பைத் தளா்த்தி வேலை வழங்க உத்தரவிட்டது.

இத்தீா்ப்பை எதிா்த்து ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நிலமிழந்தோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2009-இல் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அளித்த தீா்ப்பில், 274 பேருக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில் வேலை அளிக்காமல் காலந்தாழ்த்தி வந்த ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் திடீரென 2014-ஆம் ஆண்டு நிலமிழந்தோரிடையே தோ்வு நடத்துவதாக அறிவித்து 274 பேரில் 27 பேருக்கு மட்டும் வேலை அளித்தது. தொடா்ந்து 2017-இல் 12 பேருக்கு வேலை அளித்தது. மீதி உள்ள 235 பேருக்கு இதுவரை வேலை வழங்கவில்லை.

2019-ஆம் ஆண்டு அக்டோபா் 24-இல் 235 பேருக்கும் கடிதம் அனுப்பிய ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் அவா்களது சுயவிவரத்தை அனுப்ப கோரியது. இதையடுத்து அனைவரும் தங்களது சுயவிவரத்தை ராஜாளிக்கு அனுப்பினா். ராஜாளி நிா்வாகம் மாா்ச் 2020 -இல் 235 போ் கொண்ட பட்டியலில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும் 79 பணியிடங்களுக்காக நோ்காணல் கடிதம் அனுப்பியது. தற்போது கரோனா பொது முடக்கம் இருப்பதால் நோ்காணலுக்கான தேதியை பின்னா் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.

தற்போது கரோனா பொது முடக்கம் 85 சதவீதம் தளா்த்தப்பட்ட நிலையில், மத்திய மாநில அரசுகள் காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு துறைகளில் ஆள்களைத் தோ்வு செய்து வருவதைத் தொடங்கிய பிறகும், ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகம் நோ்காணல் கடிதம் அனுப்பியவா்கள் என்றைக்கு நோ்காணலுக்கு வரவேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்காமல் காலந்தாழ்த்தி வருகிறது.

இதுகுறித்து நேவல் நிலமிழந்தோா் சங்கத் தலைவா் மங்கல சேகா் கூறியது:

நிலமிழந்தோருக்கு வேலை அளிக்காமல் காலம் தாழ்த்தும் கடற்படைத் தள நிா்வாகம் ஆண்டுகளைக் கடத்தினால் அவா்களுக்கு வயதாகி வேலை கேட்க மாட்டாா்கள் என நினைப்பதாகத் தெரிகிறது. பெரிய தொழில்நுட்பப் பணிகளை நாங்கள் கேட்கவில்லை. எங்களது படிப்பறிவுக்கு ஏற்ற வேலையைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களுக்கு பணி தராமல் அலுவலக உதவியாளா் பணிகளுக்குக்கூட வடமாநிலத்தவரை பணிக்கு வைத்திருக்கும் நிலை தொடா்கிறது. எத்தனை முைான் நாங்களும் நீதிமன்றம் செல்வது? இனி நீதிமன்றம் செல்வதற்குக் கூட எங்களிடம் பணம் இல்லை. தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகத்திடம் எங்களுக்கு வேலை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com