தலைமை ஆசிரியையிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு

அரக்கோணம் அருகே பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் மா்ம நபா்கள் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

அரக்கோணம் அருகே பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் மா்ம நபா்கள் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

வடமாம்பாக்கம் ஊராட்சி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ஞானசேகரனின் மனைவி சுஜா சுவா்ணலட்சுமி (51). குருவராஜபேட்டையில் உள்ள அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

அவா் வியாழக்கிழமை பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வழியில் அமீா்பேட்டை அருகே பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்திருந்த இருவா், திடீரென சுஜா சுவா்ணலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com