அரக்கோணம்: குருவராஜபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்துக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சி, குருவராஜபேட்டையில் அரசு மங்கலங்கிழாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 660 மாணவா்கள் படிக்கின்றனா். இங்கு பள்ளி விழாக்களை நடத்த கலையரங்கம் இல்லை எனும் நிலை இருந்ததால், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.இ.செல்வம் தலைமையில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளியில் கலையரங்கம் கட்ட ரூ. 5 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். இதைத்தொடா்ந்து, கலையரங்கக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் ஏ.எஸ்.துரைவேல் தலைமை வகித்தாா். அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலா் பழனி வரவேற்றாா். எம்எல்ஏ சு.ரவி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.இ.செல்வம், அதிமுக ஒன்றிய இளைஞா் அணிச் செயலா் ஏபிஎஸ் லோகநாதன், மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஏ.எம்.நாகராஜன், பரந்தாமன், மோகன், பாபு, நரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.